ஓவியம்
செந்நிறம் எடுத்து வந்து
செழுமையாம் பசுமை சேர்த்து
நந்நிலம் கிழித்துப் போகும்
நதிகளில் நீலம் அள்ளி
துந்நுணன் மாலை நண்பன்
தூரிகை ஏதும் இன்றி
பன்னிடும் அற்புதம் தான்
பளிச்சிடும் அந்தி ஓவம் !
மேடென இன்பம் தந்து
மேல்விழும் துன்பும் தந்து
காடென சிலபோது ஆக்கிக்
கவின்மலர் சோலை ஆக்கி
வீடென வாசல் என்ன
விரிந்திடும் இறைவன் என்பான்
கோடிடும் வாழ்க்கை ஓவம்
கொள்கைகள் நிறங்கள் ஆகும் !
அணியெனும் அழகு சேர்த்தும்
அமைப்பினில் புதுனை கோத்தும்
மணியென வார்த்தைச் சொர்க்கம்
மனத்தினில் விரிய வைத்தும்
கணக்கிடும் கவிஞன் ஓவம்
கவிதையில் விரிதல் கண்டோம்
மணந்திடும் ஓவி யங்கள்
மண்ணிதை இயக்கு தென்போம் !!
-விவேக்பாரதி
08.08.2017
செழுமையாம் பசுமை சேர்த்து
நந்நிலம் கிழித்துப் போகும்
நதிகளில் நீலம் அள்ளி
துந்நுணன் மாலை நண்பன்
தூரிகை ஏதும் இன்றி
பன்னிடும் அற்புதம் தான்
பளிச்சிடும் அந்தி ஓவம் !
மேடென இன்பம் தந்து
மேல்விழும் துன்பும் தந்து
காடென சிலபோது ஆக்கிக்
கவின்மலர் சோலை ஆக்கி
வீடென வாசல் என்ன
விரிந்திடும் இறைவன் என்பான்
கோடிடும் வாழ்க்கை ஓவம்
கொள்கைகள் நிறங்கள் ஆகும் !
அணியெனும் அழகு சேர்த்தும்
அமைப்பினில் புதுனை கோத்தும்
மணியென வார்த்தைச் சொர்க்கம்
மனத்தினில் விரிய வைத்தும்
கணக்கிடும் கவிஞன் ஓவம்
கவிதையில் விரிதல் கண்டோம்
மணந்திடும் ஓவி யங்கள்
மண்ணிதை இயக்கு தென்போம் !!
-விவேக்பாரதி
08.08.2017
Comments
Post a Comment