இளமை போற்றுதும்
"பொதிகை" தொலைக்காட்சி, சுதந்திர தின சிறப்புக் கவியரங்கில் கொடுக்கப்பட்ட தலைப்பு.
இளமையைப் போற்றுதும் இளமையைப் போற்றுதும்
ஈடிலா விசைகொள்வதால் - அவர்
இன்றேநி னைத்ததை இன்றேமு டித்திடும்
இயல்பான நசைகொள்வதால்!
வளமையாம் பூட்டிற்குத் திறவுகோல் ஆகிடும்
வன்மையைப் பெற்றசெயலால் - வரும்
வாழ்வையொரு கடலாக்கி எதிர்நீச்சல் இட்டிடும்
வடிவத்தை உற்றவினையால்!
இளமையைப் போற்றுதும்! சுழல்கின்ற உலகத்தில்
இருந்துவாழ் கின்றபுகழால்! - தினம்
இவ்வுலகில் நிற்காதி யங்கிடும் யாவையும்
இளையவை என்றவழகால்!
தளைவீழ நெஞ்சத்தின் ஒளிசூழக் களிநேரத்
தாகங்களைக் கொள்வதால்! - பெரும்
தலையான சக்தியாம் இளமையைப் போற்றுதும்
தரணியை அவர்வெல்வதால்!
அச்சமில் லாதெழும் கன்றுகள் தாம்பின்னர்
ஆக்கத்தின் உருவமாகும்! - ஒலி
அடங்காமல் ஓடிடும் ஆற்றினுள் தாம்பாசி
அமையாதி யக்கம்காணும்
உச்சத்தைத் தொடுவதும் விழுவதும் எழுவதும்
உணர்வுள்ள இளமையில்தான்! - மலை
உயரத்தை யுஞ்சிறு கடுகெனக் கருதிடும்
உயிரோட்டம் இளமையில்தான்!
மெச்சும்ப ணம்புகழ் பாராட்டுக் கெந்நாளும்
மெலியாதி ளைஞர்வர்க்கம்! - ஒரு
மேடென்றும் காடென்றும் பாராதி றங்கிடும்
மென்மழை இளையநெஞ்சம்!
இச்சையே ஒற்றுமை! இன்பமே நட்பென்றி
ருப்பதே வலிமையாகும்! - இதை
இனிதாய்நி னைத்திடும் இயல்பினைக் கொண்டநம்
இளைஞரால் நலிவுபோகும்!
கண்ணுக்குள் அணையாத கனல்கொண்டு வாழ்பவர்
காலத்தில் அவரிளையவர்! - ஒரு
கடமைநி னைப்பதை மனத்தில்நி றுத்திடும்
கருத்துள்ளவர் இளையவர்!
மண்ணோடும் மக்களின் மகிழ்வோடும் எந்நாளும்
மனம்வைப்ப வரிளையவர்! - திட
மதியோடும் வலியோடும் நாட்டிற்கு ழைத்திடும்
மனிதரெல் லாமிளையவர்!
எண்ணத்தி லுஞ்செய்யும் வண்ணத்தி லுமென்றும்
எளியவர்தான் இளையவர்! - புது
எழுச்சிக்கு வித்தாகும் விதையாயி ருப்பவர்
எப்பொழுதுமே இளையவர்!
பண்கொண் டவர்செயல் பாங்கினைப் போற்றும்
பாரெலாம் இளைஞர்வாழ்க! - புவி
பலவாறு போற்றிடும் புகழ்மேவு தேசமாம்
பாரதத் திளமைவாழ்க!!
-விவேக்பாரதி
12.08.2017
இளமையைப் போற்றுதும் இளமையைப் போற்றுதும்
ஈடிலா விசைகொள்வதால் - அவர்
இன்றேநி னைத்ததை இன்றேமு டித்திடும்
இயல்பான நசைகொள்வதால்!
வளமையாம் பூட்டிற்குத் திறவுகோல் ஆகிடும்
வன்மையைப் பெற்றசெயலால் - வரும்
வாழ்வையொரு கடலாக்கி எதிர்நீச்சல் இட்டிடும்
வடிவத்தை உற்றவினையால்!
இளமையைப் போற்றுதும்! சுழல்கின்ற உலகத்தில்
இருந்துவாழ் கின்றபுகழால்! - தினம்
இவ்வுலகில் நிற்காதி யங்கிடும் யாவையும்
இளையவை என்றவழகால்!
தளைவீழ நெஞ்சத்தின் ஒளிசூழக் களிநேரத்
தாகங்களைக் கொள்வதால்! - பெரும்
தலையான சக்தியாம் இளமையைப் போற்றுதும்
தரணியை அவர்வெல்வதால்!
அச்சமில் லாதெழும் கன்றுகள் தாம்பின்னர்
ஆக்கத்தின் உருவமாகும்! - ஒலி
அடங்காமல் ஓடிடும் ஆற்றினுள் தாம்பாசி
அமையாதி யக்கம்காணும்
உச்சத்தைத் தொடுவதும் விழுவதும் எழுவதும்
உணர்வுள்ள இளமையில்தான்! - மலை
உயரத்தை யுஞ்சிறு கடுகெனக் கருதிடும்
உயிரோட்டம் இளமையில்தான்!
மெச்சும்ப ணம்புகழ் பாராட்டுக் கெந்நாளும்
மெலியாதி ளைஞர்வர்க்கம்! - ஒரு
மேடென்றும் காடென்றும் பாராதி றங்கிடும்
மென்மழை இளையநெஞ்சம்!
இச்சையே ஒற்றுமை! இன்பமே நட்பென்றி
ருப்பதே வலிமையாகும்! - இதை
இனிதாய்நி னைத்திடும் இயல்பினைக் கொண்டநம்
இளைஞரால் நலிவுபோகும்!
கண்ணுக்குள் அணையாத கனல்கொண்டு வாழ்பவர்
காலத்தில் அவரிளையவர்! - ஒரு
கடமைநி னைப்பதை மனத்தில்நி றுத்திடும்
கருத்துள்ளவர் இளையவர்!
மண்ணோடும் மக்களின் மகிழ்வோடும் எந்நாளும்
மனம்வைப்ப வரிளையவர்! - திட
மதியோடும் வலியோடும் நாட்டிற்கு ழைத்திடும்
மனிதரெல் லாமிளையவர்!
எண்ணத்தி லுஞ்செய்யும் வண்ணத்தி லுமென்றும்
எளியவர்தான் இளையவர்! - புது
எழுச்சிக்கு வித்தாகும் விதையாயி ருப்பவர்
எப்பொழுதுமே இளையவர்!
பண்கொண் டவர்செயல் பாங்கினைப் போற்றும்
பாரெலாம் இளைஞர்வாழ்க! - புவி
பலவாறு போற்றிடும் புகழ்மேவு தேசமாம்
பாரதத் திளமைவாழ்க!!
-விவேக்பாரதி
12.08.2017
Comments
Post a Comment