இருப்பு
நெஞ்சம் இருப்பதனாலே, கவலை
எஞ்சி இருக்கிறது !
நினைவு நெருக்குவதாலே, அழுகை
மனத்தை நிறைக்கிறது !!
அச்சம் இருப்பதனாலே, ஐயம்
மிச்சம் இருக்கிறது !
ஆடிக் கிடப்பதனாலே, நேரம்
ஓடிச் சிரிக்கிறது !!
ஆவல் இருப்பதனாலே, ஆசைத்
தாவல் குதிக்கிறது !
நேரம் இருப்பதனாலே, உடலின்
பாரம் இருக்கிறது !!
வேலை இருப்பதனாலே, கடமை
வாலை அசைக்கிறது !
தவிப்பு சுவைப்பதனாலே, தினமும்
கவிதை பிறக்கிறது !!
-விவேக்பாரதி
02.08.2017
எஞ்சி இருக்கிறது !
நினைவு நெருக்குவதாலே, அழுகை
மனத்தை நிறைக்கிறது !!
அச்சம் இருப்பதனாலே, ஐயம்
மிச்சம் இருக்கிறது !
ஆடிக் கிடப்பதனாலே, நேரம்
ஓடிச் சிரிக்கிறது !!
ஆவல் இருப்பதனாலே, ஆசைத்
தாவல் குதிக்கிறது !
நேரம் இருப்பதனாலே, உடலின்
பாரம் இருக்கிறது !!
வேலை இருப்பதனாலே, கடமை
வாலை அசைக்கிறது !
தவிப்பு சுவைப்பதனாலே, தினமும்
கவிதை பிறக்கிறது !!
-விவேக்பாரதி
02.08.2017
Comments
Post a Comment