உங்க சொல்! என் குறள் - 2
(Mahad Productions இன் ‘பயணம்’ கவிதைக் கூடலில் நேயர்கள் கொடுத்த சொல்லுக்குப் படைத்த குறள்கள்)
அழகு-
காகிதம் பேனா கலந்த நெருப்பிலுரு
வாகும் கவிதை அழகு!
புன்னகை-
புன்னகை போலோர் புதிரில்லை நெஞ்சுக்குள்
மின்னல் படைப்ப தது
வாழ்க்கை-
வானுக்குக் கீழே வளரழகு வாழ்க்கையில்
நானெந்த மேக நகர்வு?
வானவில்-
வில்வளைக்கும் யாவும் விசைபெறுமாம் வானத்தின்
வில்வளைத்த அம்போ நிறம்?
வில்வளைத்த அம்போ நிறம்?
சிந்தனை-
உன்றனை என்றனை இன்றினைச் சேர்த்திட்ட
சிந்தனை தன்னைநீ வாழ்த்து!
டீக்கடை-
வாழ்க்கை வசந்தமாய் வாய்த்தொரு சொர்க்கத்தை
டீக்கடை என்றால் தகும்!
காய்ந்தநீர்-
காய்ந்துநீர் இன்றி கழனிவாடும் நேரமெலாம்
சாய்ந்துபோம் இந்த சகம்!
இரவு-
இரவென்றால் என்ன இருட்டா? கனவின்
வரவுக்கு வாய்த்த விரிப்பு!
வரவுக்கு வாய்த்த விரிப்பு!
ஆனந்தக் கண்ணீர்-
ஆனந்தக் கண்ணீர் அகம்விட் டெழுகையில்
ஞானங்கள் தோற்பும் நயம்
ஞானங்கள் தோற்பும் நயம்
காதல் -
நான்மறையும் ஆன்மிகம் நல்லஎன் காதலே
நான்மறைய இல்லையே நாண்
நான்மறைய இல்லையே நாண்
தனிமை-
தனியேதான் வந்தோம் தனிப்போவோம் ஆனால்
தனித்தில்லை தோழரே நாம்
தனித்தில்லை தோழரே நாம்
முலை-
முலைகடித்த இன்பத்தில் மூச்சுவிட வில்லை
தலைமார்பில் சாய்த்த தளிர்
தலைமார்பில் சாய்த்த தளிர்
வண்ணம்-
வண்ணத்திற் கெல்லை வரம்புண்டோ? கண்மூட
எண்ணத்தில் பூக்கும் உலகு
எண்ணத்தில் பூக்கும் உலகு
வளையல்-
கலகலக்கும் கைவளையின் காதல் விழைவேன்
உளமுருகி ஓடும் விதம்
உளமுருகி ஓடும் விதம்
காமம்-
தொட்டுத் தொடங்கித் தொலைந்து வியர்வைகள்
விட்டுக் கலக்க விழை
மோகம்-
முனகிடும் உச்சத்தில் மூச்சிறைத்த போது
மணந்தநம் தேகம் மலர்
மணந்தநம் தேகம் மலர்
ஆழி-
ஆழத்தின் இன்பத்தை ஆழியென்று சொல்லிவைத்தார்
வாழியஃ துள்ள மனம்!
வாழியஃ துள்ள மனம்!
-விவேக்பாரதி
19.03.2023
Comments
Post a Comment