சகியைத் தேடி
கைகள் நீட்டித் தேடுகின்றேன் - என்
காதல் நிலவை காணவில்லை!
கண்கள் விரித்துக் காத்திருந்தும் - அவள்
கனிந்த கைகள் தீண்டவில்லை!
சைகை மொழியில் தேடுகின்றேன் - என்
சகியை ஏனோ காணவில்லை
சலங்கை சத்தம் கேட்கிறது - அவள்
சரிந்த நிழலைக் காணவில்லை!
என்னை எழுப்பப் பின்முதுகில் - அவள்
எட்டி உதைப்பாள்! நேரவில்லை!
ஏதோ காதில் முணுமுணுத்து - அவளை
ஏந்தி அணைப்பேன்! நிகழவில்லை!
கண்ணைத் திறந்து கன்னத்தில் - நான்
கவிதை இடுவேன்! காணவில்லை!
காலம் மட்டும் செல்கிறது - எனைக்
கையால் மீட்பாள் தோன்றவில்லை!
அத்தான் என்பாள் ஆசையுடன் - நான்
அதைத்தா என்பேன் வாஞ்சையுடன்
அதிகா லையிலா என்றபடி - என்
ஆசை தணிப்பாள் இளையகொடி
பித்தா என்பாள் முரண்பிடிப்பாள் - அது
பிடித்திருந் தாலும் அவள்துடிப்பாள்
பிறையாய் நாணி முகம்குழைவாள் - அப்
பிரியத் தில்நான் கண்மலர்வேன்!
இப்போ ததுபோல் நேரவில்லை - என்
இரவு தீர வழியுமில்லை
இதயம் திருடிப் போனகிள்ளை - அவள்
எங்கே உள்ளாள் தெரியவில்லை!
எப்போ தேனும் கனவுகளில் - கண்
இமைக்காப் போதில் நினைவுகளில்
என்முன் வருவாள் சிரித்தபடி - எனை
எழுதச் சொல்வாள் அணைத்தபடி!
பூமிப் பந்து சுற்றுவதைச் - சில
போது மறக்கும்! நானவளின்
போகம் மறத்தல் சாத்தியமோ? - அப்
போதை தவிர்த்தால் இன்பமுண்டோ?
சாமிக் கெல்லாம் உயர்தலைவி - என்
சக்தி கொடுத்த உறவல்லவோ!
சகியை வேண்டிக் காத்திருக்கும் - இச்
சென்மம் கவிதை வரவல்லவோ!!
-விவேக்பாரதி
16.03.2019
காதல் நிலவை காணவில்லை!
கண்கள் விரித்துக் காத்திருந்தும் - அவள்
கனிந்த கைகள் தீண்டவில்லை!
சைகை மொழியில் தேடுகின்றேன் - என்
சகியை ஏனோ காணவில்லை
சலங்கை சத்தம் கேட்கிறது - அவள்
சரிந்த நிழலைக் காணவில்லை!
என்னை எழுப்பப் பின்முதுகில் - அவள்
எட்டி உதைப்பாள்! நேரவில்லை!
ஏதோ காதில் முணுமுணுத்து - அவளை
ஏந்தி அணைப்பேன்! நிகழவில்லை!
கண்ணைத் திறந்து கன்னத்தில் - நான்
கவிதை இடுவேன்! காணவில்லை!
காலம் மட்டும் செல்கிறது - எனைக்
கையால் மீட்பாள் தோன்றவில்லை!
அத்தான் என்பாள் ஆசையுடன் - நான்
அதைத்தா என்பேன் வாஞ்சையுடன்
அதிகா லையிலா என்றபடி - என்
ஆசை தணிப்பாள் இளையகொடி
பித்தா என்பாள் முரண்பிடிப்பாள் - அது
பிடித்திருந் தாலும் அவள்துடிப்பாள்
பிறையாய் நாணி முகம்குழைவாள் - அப்
பிரியத் தில்நான் கண்மலர்வேன்!
இப்போ ததுபோல் நேரவில்லை - என்
இரவு தீர வழியுமில்லை
இதயம் திருடிப் போனகிள்ளை - அவள்
எங்கே உள்ளாள் தெரியவில்லை!
எப்போ தேனும் கனவுகளில் - கண்
இமைக்காப் போதில் நினைவுகளில்
என்முன் வருவாள் சிரித்தபடி - எனை
எழுதச் சொல்வாள் அணைத்தபடி!
பூமிப் பந்து சுற்றுவதைச் - சில
போது மறக்கும்! நானவளின்
போகம் மறத்தல் சாத்தியமோ? - அப்
போதை தவிர்த்தால் இன்பமுண்டோ?
சாமிக் கெல்லாம் உயர்தலைவி - என்
சக்தி கொடுத்த உறவல்லவோ!
சகியை வேண்டிக் காத்திருக்கும் - இச்
சென்மம் கவிதை வரவல்லவோ!!
-விவேக்பாரதி
16.03.2019
Comments
Post a Comment