அரசனும் அரசியும்
மன்னவன் நானுனக்கு - அடி
மாதரசே நீ அரசியடி!
என்னரும் பைங்கிளியே - நீ
என்முன்பு வந்திடும் போதினையே
இன்னமும் வேண்டுகிறேன்! - என்
இதய அறைகளில் எதிரொலியாய்
உன்னுடை நாமமடி! - எனை
உதறிவிட் டாலென்ன நான்புரிவேன்!
மாதரசே நீ அரசியடி!
என்னரும் பைங்கிளியே - நீ
என்முன்பு வந்திடும் போதினையே
இன்னமும் வேண்டுகிறேன்! - என்
இதய அறைகளில் எதிரொலியாய்
உன்னுடை நாமமடி! - எனை
உதறிவிட் டாலென்ன நான்புரிவேன்!
பூக்களின் ராணியடி - நீ
புள்ளினம் பேசிடும் ஓசையடி
பாக்களின் தேனியடி - எனைப்
பாவலன் ஆக்கிய தேவியடி
சீக்கிரம் நீவரவும் - என்
ஜீவன் ஒளிபெற வைத்திடவும்
தீக்கிறை யாகிமனம் - ஒரு
திண்ண தவத்தை இயற்றும்நிதம்!
புள்ளினம் பேசிடும் ஓசையடி
பாக்களின் தேனியடி - எனைப்
பாவலன் ஆக்கிய தேவியடி
சீக்கிரம் நீவரவும் - என்
ஜீவன் ஒளிபெற வைத்திடவும்
தீக்கிறை யாகிமனம் - ஒரு
திண்ண தவத்தை இயற்றும்நிதம்!
கோபத்தில் மூத்தவளே - எனைக்
கோல மொழியில் சிறையெடுத்தே
ஆபத்தை நீக்கிவைத்தாய் - அடி
ஆசைவைத்தாய் மிகப் பாசம்வைத்தாய்!
தாபத்தை நீகளைந்தாய் - என்
தமிழைக் கவிதையை எளிமைசெய்தாய்
தூபத்தைப் போல்மனத்தில் - நீ
துணையெனவே நின்று சுடரவைத்தாய்!
காதலைச் செய்யவந்தாய் - என்
கவிதைகள் கேட்டு ரசிகையென
நீதிறம் ஏற்றிநின்றாய்! - இன்று
நேற்றல்லடி நம் காதலது
காதங்கள் தூரங்களும் - பல
காலங்கள் வாழ்ந்து சிறந்ததுவாம்!
நீதிகள் சொல்லியவை - இதில்
நீயும் நானுமொரு காதலர்கள்!
கவிதைகள் கேட்டு ரசிகையென
நீதிறம் ஏற்றிநின்றாய்! - இன்று
நேற்றல்லடி நம் காதலது
காதங்கள் தூரங்களும் - பல
காலங்கள் வாழ்ந்து சிறந்ததுவாம்!
நீதிகள் சொல்லியவை - இதில்
நீயும் நானுமொரு காதலர்கள்!
என்னை இணைந்ததுவும் - எனது
இன்பங்கள் என்று வளர்ந்ததுவும்
மின்னை நிகர்த்ததுவும்! - எழில்
மீட்டி எனையுன்னில் வளர்த்ததுவும்
உன்னை தொழுவதுவும் - நான்
உள்ளத்தில் இன்று கதறுவதும்
இன்றைய செயலில்லையே - அவை
இனிதில் எழுதிய சாத்திரமாம்!
இன்பங்கள் என்று வளர்ந்ததுவும்
மின்னை நிகர்த்ததுவும்! - எழில்
மீட்டி எனையுன்னில் வளர்த்ததுவும்
உன்னை தொழுவதுவும் - நான்
உள்ளத்தில் இன்று கதறுவதும்
இன்றைய செயலில்லையே - அவை
இனிதில் எழுதிய சாத்திரமாம்!
ஆசைக் குகந்தவளே - எனது
ஆழம் அகலம் அறிந்தவளே
நேசத் தமிழ்மகளே! - எனை
நேற்றுடன் நாளைக்கும் சேர்பவளே!
கூசும் நிலாச்சுடரே - எனைக்
குறியுடன் வாழ்ந்திடச் செய்பவளே!
பூசைக் குரியவளே! - உன்
புன்னகை யாலெனை ஆள்பவளே!
ஆழம் அகலம் அறிந்தவளே
நேசத் தமிழ்மகளே! - எனை
நேற்றுடன் நாளைக்கும் சேர்பவளே!
கூசும் நிலாச்சுடரே - எனைக்
குறியுடன் வாழ்ந்திடச் செய்பவளே!
பூசைக் குரியவளே! - உன்
புன்னகை யாலெனை ஆள்பவளே!
உன்றனை மெச்சுகிறேன்! - நீ
உள்ளத் திருப்பவள் என்பதில்தான்
என்பிழை நான்மறந்தேன்! - உன்
ஏவலில் செய்தி புதியதுற்றேன்!
என்னிலை மாறிடவும் - நான்
எதிலும் நிலையற்று வாழுகின்ற
இன்னலைத் தீர்ந்திடவும் - என்
இறைவி அளித்திட்ட சீதனமே!
உள்ளத் திருப்பவள் என்பதில்தான்
என்பிழை நான்மறந்தேன்! - உன்
ஏவலில் செய்தி புதியதுற்றேன்!
என்னிலை மாறிடவும் - நான்
எதிலும் நிலையற்று வாழுகின்ற
இன்னலைத் தீர்ந்திடவும் - என்
இறைவி அளித்திட்ட சீதனமே!
கோடிக ளாய்க்கவிதை - எனைக்
கொட்டவும் வைக்கின்ற அற்புதமே!
ஓடிடும் நேரங்களாய் - எனை
கொட்டவும் வைக்கின்ற அற்புதமே!
ஓடிடும் நேரங்களாய் - எனை
ஓசைக்குள் மாட்டிய சொற்பதமே!
நாடி நரம்பிலெல்லாம் - எனில்
நன்கு விளங்கிடும் காதலியே
பாடுகிறேன் உனையே - பக்கம்
பார்த்தருள் செய்திட வேண்டுகிறேன்!
நாடி நரம்பிலெல்லாம் - எனில்
நன்கு விளங்கிடும் காதலியே
பாடுகிறேன் உனையே - பக்கம்
பார்த்தருள் செய்திட வேண்டுகிறேன்!
மெல்லிய இதழ்வேண்டும் - எனை
மேயும் இருவிழி அவைவேண்டும்
சொல்லரும் மனம்வேண்டும் - உடன்
சொக்கப்பொன் தேகமும் வரவேண்டும்!
அல்நிறக் குழல்வேண்டும் - அதில்
ஆக்கிய போதை மணம்வேண்டும்
வல்லவள் வரவேண்டும் - என்
வாழ்க்கை நிறையும் வளம்வேண்டும்!
மேயும் இருவிழி அவைவேண்டும்
சொல்லரும் மனம்வேண்டும் - உடன்
சொக்கப்பொன் தேகமும் வரவேண்டும்!
அல்நிறக் குழல்வேண்டும் - அதில்
ஆக்கிய போதை மணம்வேண்டும்
வல்லவள் வரவேண்டும் - என்
வாழ்க்கை நிறையும் வளம்வேண்டும்!
புத்தமுதம் தரவும் - நீ
புளகம் கொடுக்கத் தழுவியெனை
நித்தம் வதம்செயவும் - உடல்
நீளம் அளந்துநின் முத்தங்களால்
ஒத்தனம் தந்திடவும் - மனம்
ஓங்கி இசைந்திடும் காதலியே
இத்தனையும் தரவே - இந்த
இணையத் தறைமிக சிறியதடி!!
புளகம் கொடுக்கத் தழுவியெனை
நித்தம் வதம்செயவும் - உடல்
நீளம் அளந்துநின் முத்தங்களால்
ஒத்தனம் தந்திடவும் - மனம்
ஓங்கி இசைந்திடும் காதலியே
இத்தனையும் தரவே - இந்த
இணையத் தறைமிக சிறியதடி!!
#மௌனமடி நீயெனக்கு
-விவேக்பாரதி
19.04.2019
Comments
Post a Comment