அவன் எத்தனை?
ஏழை மனத்தில் ஊஞ்சல் கட்டி
இறைவன் ஆடுகிறான் - பிறர் வாழக் கரங்கள் தருவோர் நெஞ்சில் வசந்தம் பாடுகிறான் தாழும் நிலையில் தள்ளி அணைத்துத் தாய்மை காட்டுகிறான் - நாம் வீழும் பொழுதில் பாடம் புகட்டி வித்தை கூட்டுகிறான்!
இறைவன் ஆடுகிறான் - பிறர் வாழக் கரங்கள் தருவோர் நெஞ்சில் வசந்தம் பாடுகிறான் தாழும் நிலையில் தள்ளி அணைத்துத் தாய்மை காட்டுகிறான் - நாம் வீழும் பொழுதில் பாடம் புகட்டி வித்தை கூட்டுகிறான்!
அவன் எத்தனை தொழிலுக் கதிபன்!
அவன் எத்தனை பேரின் தொண்டன்!
அவன் எத்தனை பேருக் குண்மை!
அவன் எத்தனை பேரின் பொம்மை!
அவன் எத்தனை பேரின் தொண்டன்!
அவன் எத்தனை பேருக் குண்மை!
அவன் எத்தனை பேரின் பொம்மை!
சின்ன விதையை உந்தும் விசையாய்ச்
சிரித்துப் பார்க்கிறான் - அவன்
மின்னல் கீற்றும் மேகப் பாட்டும்
விரித்துப் பார்க்கிறான்
அன்பின் வடிவில் ஆனந்த மாகி
அமர்ந்து கிடக்கிறான் - எங்கும்
இன்பம் நிறைந்தால் துன்பம் துடைக்க
இடத்தை கேட்கிறான்!
சிரித்துப் பார்க்கிறான் - அவன்
மின்னல் கீற்றும் மேகப் பாட்டும்
விரித்துப் பார்க்கிறான்
அன்பின் வடிவில் ஆனந்த மாகி
அமர்ந்து கிடக்கிறான் - எங்கும்
இன்பம் நிறைந்தால் துன்பம் துடைக்க
இடத்தை கேட்கிறான்!
அவன் எத்தனை பெரிய ஞானி!
அவன் எத்தனைக் கடலில் தோணி!
அவன் எத்தனை உயர்ந்த ஏழை!
அவன் எத்தனை துளிர்க்கும் வாழை!
அவன் எத்தனைக் கடலில் தோணி!
அவன் எத்தனை உயர்ந்த ஏழை!
அவன் எத்தனை துளிர்க்கும் வாழை!
உணர மறுத்தார் உணர்ந்தார் என்று
உருவம் பார்ப்பதில்லை - உண்மை
புணர முடியும் இடத்தில் சேரப்
புத்தி நடுங்கவில்லை
கணங்க ளெல்லாம் மனத்தில் நின்றே
காட்சி தருகிறான் - நம்மை
அணைக்கும் போது சேதி சொல்லி
அனலைக் குறைக்கிறான்!
உருவம் பார்ப்பதில்லை - உண்மை
புணர முடியும் இடத்தில் சேரப்
புத்தி நடுங்கவில்லை
கணங்க ளெல்லாம் மனத்தில் நின்றே
காட்சி தருகிறான் - நம்மை
அணைக்கும் போது சேதி சொல்லி
அனலைக் குறைக்கிறான்!
அவன் எத்தனை காலம் வாழ்வான்
அவன் எத்தனை காலம் தாழ்வான்
அவன் எத்தனை நெஞ்சை ஆள்வான்
அவன் எப்போ துலகில் மீள்வான்?
அவன் எத்தனை காலம் தாழ்வான்
அவன் எத்தனை நெஞ்சை ஆள்வான்
அவன் எப்போ துலகில் மீள்வான்?
-விவேக்பாரதி
26.07.2018
26.07.2018