கருநிறக் கூந்தலும் மருளும் கண்களும்
பஞ்சணை மெத்தையடி
நூலாடை மூடிடினும் – நீயொரு
நெய்ரவைப் பொங்கலடி
நூலாடை மூடிடினும் – நீயொரு
நெய்ரவைப் பொங்கலடி
கருநிறக் கூந்தலடி – அவைபுது
கார்த்திகை வானமடி
மருகிடும் கண்களடி – அவையந்த
வானத்து மீன்களடி
கார்த்திகை வானமடி
மருகிடும் கண்களடி – அவையந்த
வானத்து மீன்களடி
ஆடைகள் மேகமடி – நீயொரு
அற்புத பானமடி
ஜாடைகள் வேதமடி – உனக்குள
சாயல்கள் தெய்வமடி
அற்புத பானமடி
ஜாடைகள் வேதமடி – உனக்குள
சாயல்கள் தெய்வமடி
புன்னகை முத்துகளாம் – இதழதை
புதுக்கிடும் சிப்பியடி
மென்னகை ஒன்றிருந்தால் – பிறகெந்த
மேன்மையும் தேவையில்லை
பார்வை படும்தொலைவில் – விரல்கள்
பட்டிடும் தூரத்தில்நாம்
சேர்ந்திருந்தால் போதும் – அதிலென்
ஜீவன் அடங்குமடி!!
புதுக்கிடும் சிப்பியடி
மென்னகை ஒன்றிருந்தால் – பிறகெந்த
மேன்மையும் தேவையில்லை
பார்வை படும்தொலைவில் – விரல்கள்
பட்டிடும் தூரத்தில்நாம்
சேர்ந்திருந்தால் போதும் – அதிலென்
ஜீவன் அடங்குமடி!!
அன்பு நண்பர் ஷ்யாம் சங்கரின் ஓவியத்துக்கு நன்றி.
#மௌனமடி நீயெனக்கு
-விவேக்பாரதி
11.12.2021
Comments
Post a Comment