மாதங்களில் அவள் மார்கழி
சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய்
யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப்
பூமகளே நின்றிருக்கும் போது! (1)
மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின்
தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும்
பாமாலை காதல் படிப்பு! (2)
பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு
காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த
மாதர் விளக்கே மகிழ்வு! (3)
அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன்
கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின்
முன்சிரிக்கும் உன்றன் முருகு! (4)
உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி
படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான்
பிடித்தவராய் செய்தல் பிழைப்பு! (5)
அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள்
மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே
சீதமிகு பாடல்களோ செப்பு! (6)
எப்போதும் நெஞ்சில் எழுததிலை - கற்போர்க்குக்
காதலும் பக்தியும் காமமும் ஒன்றென
ஓதியதே உன்றன் உயர்வு! (7)
நயமென்று சொல்லி நயந்தேன் - சுயம்கண்ட
பெண்ணல்லோ நீயுன்றன் பெற்றியை ஊர்படித்தால்
மண்ணல்லோ சொர்க்கம் மலர்த்து! (8)
பலர்மாலைப் பாதப் படித்தாய்; – சிலர்மாலை
காப்பாள னாய்க்காணக் காதலனாய் நீகண்டு
பூப்படைந்தாய் என்னே புகழ் (9)
மகிழரங்கம் ஆனதடி மாதே – துகிலரங்கில்
தென்றல் துளசிமணம் தேக்கிவரும் வேளையிலே
மன்றம் மகிழும் மணந்து (10)
-விவேக்பாரதி
17.12.2020
Comments
Post a Comment