மின்சார வருத்தம்


சிட்டுக் குருவியெனச்
சிங்கார ஜடை பின்னி வர,
பட்டுப் பாவாடை உடுத்தி
வண்ண மீனாய் மின்னி வர,
அரும்பே !
நீ துரும்பாய்க் 
கரும்புச் சாறு கேட்டு
அழுகையில் சாறுனக்கு
அரைத்துக் கொடுக்க,
இங்கு மின்சாரம்
இல்லையடி தோழி!!

#பூர்வாங்கம்

-விவேக்பாரதி
24.05.2013

Comments

Popular Posts