பீங்கான் இதயம்
"There's nothing more challenging to an artist than an empty canvas; nothing more inviting to a poet than a pure, virgin sheet of paper" என்று ஆர்.எஸ்.மணி ஐயா இசைக்கவி ரமணன் ஐயாவுக்கு எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உயிர்ப்பான வரி என்னை மிகவும் கவர்ந்தது.
அடுத்த சில நாட்களில், அலுவலகத்தில் ஒரு வெள்ளைத் தாளைக் கண்டதும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தேன். பையிலிருந்து வெளியே எடுக்கும்போது பேனா கீழே விழுந்தது. அதுவரையில் என்ன எழுதுவதென்று தெரியாமல் இருந்தது, கீழே விழுந்த பேனாவை எடுத்துத் தாளில் வைத்ததும் அது கொண்டு சென்றது!
ஒரு கவிதை பிறந்தது.
கல்கி அலுவலகத்தில் பிறந்தது இந்தவார கல்கி பத்திரிகையிலேயே அச்சாகி இருக்கிறது!
கொஞ்சம் பாருங்களேன்...
Comments
Post a Comment