நகைச்சுவை நானூறு - பாவங்கள்
அருந்தமிழ் சொல்லும் ஆசிரி ஒருவர்
மருந்து வாங்கக் கடைக்குச் சென்றார்
“தலைமிக வலிக்க, சளிசிறி(து) இருக்க
விலை பெரி(து) எனினும் வேண்டுவ(து) ஒன்றே
என் பாவங்கள் எரிக்கும் மருந்தை
உண்ணக் கொடுத்து உதவுக” என்றார்
மருந்துக்காரர் மயக்கம் கொண்டு
திருந்தச் சொல்க ஐயா என்றதும்
ஆங்கிலம் எனக்குப் பிடிக்கா(து) ஐயோ
ஈங்(கு) எனை அதையே சொல்ல வைக்கிறீர்
“எரித்த்ரோ மைசின்” என்றார்
மருந்துக்காரர் மல்லாந்தாரே!!
என் பாவங்கள் எரியும் மருந்து - எரி throw my sin.
-விவேக்பாரதி
08.05.2019
08.05.2019
Comments
Post a Comment