தேநீர் விடுதி


தேநீர் விடுதியிலே
நீயும் நானுமன்று
தேநீர் குடிக்கச் சென்றோம்
என் கண்கள் கள்ளைக் குடித்தனவே!

காதல் பெருக்கினிலே
ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம்
பேசி முடித்த பின்பு
கடைக்காரரிடம் கடமையாய்!   
தேநீர் இனிமை என்றேன்

அப்போது புரிந்தது
நாம் குடித்தது தேநீர் அல்ல
காபியடி!

-விவேக்பாரதி
22.04.2014

Comments

Popular Posts