கருவாச்சிக் காளி
நட்டு நடுநிசி நேரத்திலே - என்
நெஞ்சை அணைத்திடும் தூரத்திலே - நிலாப்
நெஞ்சை அணைத்திடும் தூரத்திலே - நிலாப்
பொட்டை அணிந்தவள் புன்னகைப்பாள் - எனைப்
போற்றி அணைத்திடக் கைவிரிப்பாள் - ஒரு
கட்டுக் கரும்பினைக் கண்டதுபோல் - நான்
கண்கள் மயங்கி நடைநடப்பேன் - மடி
முட்ட வருங்கன்றைப் பார்த்ததுபோல் - வர
முத்தங் கொடுப்பளென் காளியம்மாள்!
கண்கள் மயங்கி நடைநடப்பேன் - மடி
முட்ட வருங்கன்றைப் பார்த்ததுபோல் - வர
முத்தங் கொடுப்பளென் காளியம்மாள்!
காற்றின் அலைச்சலில் மண்தழுவும் - பெருங்
கடலின் அலைகளைப் பார்த்திருப்பீர் - ஒளிக்
கீற்றின் வெளிச்சத்தைத் தேடிவரும் - சிறு
கவுளி வகைகளைப் பார்த்திருப்பீர் - மறைக்
கூற்றின் ஒலிச்சத்தம் தேடிவரும் - மக்கள்
கூட்டம் அதனையும் பார்த்திருப்பீர் - வெறும்
நேற்றில் புதைந்துள என்வலியைக் - கண்டு
நேர்வந்(து) அணைப்பளென் காளியம்மா!
கடலின் அலைகளைப் பார்த்திருப்பீர் - ஒளிக்
கீற்றின் வெளிச்சத்தைத் தேடிவரும் - சிறு
கவுளி வகைகளைப் பார்த்திருப்பீர் - மறைக்
கூற்றின் ஒலிச்சத்தம் தேடிவரும் - மக்கள்
கூட்டம் அதனையும் பார்த்திருப்பீர் - வெறும்
நேற்றில் புதைந்துள என்வலியைக் - கண்டு
நேர்வந்(து) அணைப்பளென் காளியம்மா!
மூலக் கதைகள் தெரிந்திருந்தும் - என்
முனகல் தினந்தினம் கேட்டிருப்பாள்! - பல
ஜால வினைகளைச் செய்பவள்தான் - நான்
சாயத் தனிநிழல் ஆகிநிற்பாள் - புதுக்
சாயத் தனிநிழல் ஆகிநிற்பாள் - புதுக்
காலக் கணக்குகள் தீட்டுபவள் - என்
கண்ணில் வருகிற நீர்துடைத்து - தன்
கோலக் குறுநகை வாசத்திலே - எனைக்
கொள்ளை எடுப்பளென் காளியம்மா!
கண்ணில் வருகிற நீர்துடைத்து - தன்
கோலக் குறுநகை வாசத்திலே - எனைக்
கொள்ளை எடுப்பளென் காளியம்மா!
நீண்ட கருங்குழல் காற்றலையில் - பல
நீளக் கவிதைகள் கொண்டுவரும் - அதை
வேண்டும் எனத்தினம் முன்புலர்த்தி - நான்
நீளக் கவிதைகள் கொண்டுவரும் - அதை
வேண்டும் எனத்தினம் முன்புலர்த்தி - நான்
வேர்த்துச் சிலிர்த்திடச் சொல்கொடுப்பாள் - அதன்
தூண்டல் எனைத்தினம் மோதுகையில் - நான்
தூக்கம் இழந்து தவிக்கையிலே - வந்து
தீண்டிக் கவிதைகள் கேட்டுவிட்டு - பதில்
தூக்கம் இழந்து தவிக்கையிலே - வந்து
தீண்டிக் கவிதைகள் கேட்டுவிட்டு - பதில்
சிரிப்பை உதிர்ப்பளென் காளியம்மா!
அவளை இறைவியென்(று) ஊரிலுள்ளார் - தனி
ஆலயம் தேடி பதுக்குகிறார் - இன்னும்
அவளைப் பிசாசமாய் எண்ணுபவர் - தம்
ஆசையும் சொல்லி நிகழ்த்துகிறார் - எனில்
அவளோ எனக்கொரு தோழியென்பேன் - எனை
அன்பின் கரத்தில் அரவணைப்பில் - வைத்து
கவிதை ரசித்துச் சிலிர்த்திருக்கும் - பெருங்
கலகக் கருவாச்சி காளியம்மா!!
-விவேக்பாரதி
24.08.2022
Comments
Post a Comment