சீக்கிரம் வந்தால்....
மாமன் நினைப்போடே மாதம் கழிக்கின்றேன்
காமன் கணைபட்டுக் காய்கின்றேன் - சாமத்தில்
பேய்க்கனா கண்டு புரள்கின்றேன்! காதலன்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
பேய்க்கனா கண்டு புரள்கின்றேன்! காதலன்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
திருமணத்துக்காகக் காத்திருக்கும் தலைவன்
கன்னி பெயராகக் காத்திருந்து நோகின்றேன்!
வண்ணக் கரம்கோக்க வாழ்கின்றேன் - பெண்மையின்
பூக்கரம் பற்றிப் புகழ்பெறக் கல்யாணம்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
வண்ணக் கரம்கோக்க வாழ்கின்றேன் - பெண்மையின்
பூக்கரம் பற்றிப் புகழ்பெறக் கல்யாணம்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
பட்டிணத்தடிகள்
சதையெத்துக் கென்றே சலித்தேன் - விதியென்னும்
பேய்க்கரும்பு தித்தித்துப் பேறுதரும் நன்னாள்தான்
சிக்கிரம் வந்தால் சிறப்பு!
பேய்க்கரும்பு தித்தித்துப் பேறுதரும் நன்னாள்தான்
சிக்கிரம் வந்தால் சிறப்பு!
மழைக்குக் காத்திருக்கும் உழவன்
ஓய்ந்து வலியாலே உள்நொந்தேன் - சாய்ந்தநெல்
தீக்கிரை யாகுமுன் தீரா முகில்மழை
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
தீக்கிரை யாகுமுன் தீரா முகில்மழை
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
மரணத்திற்குக் காத்திருக்கும் முதுமை
வாய்வந்து பேசா வரிகுளறப் - பாய்வெந்து
யாக்கைகிடக் காமல் யமன்கொண்டு போகும்நாள்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
யாக்கைகிடக் காமல் யமன்கொண்டு போகும்நாள்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
சம்பளத்துக்குக் காத்திருக்கும் குடும்பஸ்தன்
காலண்டர் தேய்வதுபோல் காசும் உருத்தேய்ந்து
நூலன்ன நிற்குதடி நோவுதரக் - பாலுக்கும்
போக்கிடம் தேடிப் புழுங்காமல்! சம்பளமும்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
நூலன்ன நிற்குதடி நோவுதரக் - பாலுக்கும்
போக்கிடம் தேடிப் புழுங்காமல்! சம்பளமும்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
கைக்காசுக்குக் காத்திருக்கும் இளைஞன்
மாதக் கடைசி வழிச்சருகாய் நாமானோம்
ஏது சுகம்?நீ எழுந்திந்திருடா - போதையினி
டீக்கடையே நாதியாகித் தீர்த்திருப்போம்! கைக்காசு
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
ஏது சுகம்?நீ எழுந்திந்திருடா - போதையினி
டீக்கடையே நாதியாகித் தீர்த்திருப்போம்! கைக்காசு
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
விடுமுறைக்குக் காத்திருக்கும் மாணவன்
தேர்வு நெருங்கிவந்து தின்னுதம்மா! பாடங்கள்
சோர்வுதரும் அன்றி சுகமில்லை - தீர்வென்ன
பாக்கியின்றி லூட்டியிட்டுப் பாயும் விடுமுறைதான்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
சோர்வுதரும் அன்றி சுகமில்லை - தீர்வென்ன
பாக்கியின்றி லூட்டியிட்டுப் பாயும் விடுமுறைதான்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
விடுதலைக்குக் காத்திருக்கும் போர்வீரன்
வெள்ளையன் போட்ட விலங்குக் கடங்காமல்
துள்ளி எழுந்தோம், தொடர்ந்திருப்போம் - கொள்ளையாம்
தூக்கத்தை நீக்கித் துளிர்க்கும் விடுதலைநாள்
சீக்கிரம் வந்தால் சிறப்பு!
பொதுவுடமைக்குக் காத்திருக்கும் போராளி
சாதிமதம் சொல்லி சறுக்கி விடும்கூட்டம்
ஆதிவழி நின்ற அறிவுணர்ந்து - மேதினியில்
வாக்குரிமை மூச்சுரிமை வாழுரிமை ஒன்றெனும்நாள்,
சீக்கிரம் வந்தால் சிறப்பு!!
-விவேக்பாரதி
21-12-2021
Comments
Post a Comment