சரித்திரத் தேர்ச்சி கொள்
வந்தவர் நின்றவர் சென்றவர் எத்தனை
வாழ்ந்தவர் எத்தனை சொல்லுகடீ - இன்னும்
வாழ்பவர் யாரெனச் சொல்லுங்கடீ - உயிர்
தந்தவர் எத்தனை நொந்தவர் எத்தனை
சரித்திரத் தேர்ச்சி கொள்ளுங்கடீ - எது
சரியெனக் கண்டுதான் சொல்லுங்கடீ
வாழ்ந்தவர் எத்தனை சொல்லுகடீ - இன்னும்
வாழ்பவர் யாரெனச் சொல்லுங்கடீ - உயிர்
தந்தவர் எத்தனை நொந்தவர் எத்தனை
சரித்திரத் தேர்ச்சி கொள்ளுங்கடீ - எது
சரியெனக் கண்டுதான் சொல்லுங்கடீ
முன்னம் இருந்தவர் முற்றும் வளர்ந்தவர்
முழுமை அறிவு பெற்றவராம் - ஞான
முதிர்ச்சி நிலையை உற்றவராம் - வந்து
பின்னம் இணைந்தவர் பின்னம் புரிந்ததில்
பிழைத்த தெதுவும் இல்லையடீ - அந்தப்
பிழையில் வந்தது தொல்லையடீ
முழுமை அறிவு பெற்றவராம் - ஞான
முதிர்ச்சி நிலையை உற்றவராம் - வந்து
பின்னம் இணைந்தவர் பின்னம் புரிந்ததில்
பிழைத்த தெதுவும் இல்லையடீ - அந்தப்
பிழையில் வந்தது தொல்லையடீ
ஆண்ட பரம்பரை என்றுரைப்பார் அவர்
ஆண்டது மண்ணா மனங்களையா? - இல்லை
ஆற்றிய போரின் பிணங்களையா? - புகழ்
கொண்ட பரம்பரை என்றுரைப்பார் சிலர்
கொடுத்துச் சென்றது கோடியடி - பலர்
குரைத்துக் கிடக்கும் பேடியடீ
ஆண்டது மண்ணா மனங்களையா? - இல்லை
ஆற்றிய போரின் பிணங்களையா? - புகழ்
கொண்ட பரம்பரை என்றுரைப்பார் சிலர்
கொடுத்துச் சென்றது கோடியடி - பலர்
குரைத்துக் கிடக்கும் பேடியடீ
பொன்விளை பூமியில் மண்ணும் மலடெனப்
போட்டது யாரடி முள்விதையை - நிஜ
போக்கில் அறிக அதன்கதையை - இங்கு
தன்விளை யாட்டுக்கு நாட்டை வளைக்கிற
தலைமை வந்த கதையென்னடீ - அந்த
தகைமை கண்ட விலையென்னடீ
போட்டது யாரடி முள்விதையை - நிஜ
போக்கில் அறிக அதன்கதையை - இங்கு
தன்விளை யாட்டுக்கு நாட்டை வளைக்கிற
தலைமை வந்த கதையென்னடீ - அந்த
தகைமை கண்ட விலையென்னடீ
யாவும் உணர்ந்திட ஆழ்ந்து படிக்கணும்
யாருக்கும் யாவும் சமவுரிமை - இங்கும்
யாவர்க்கும் உண்டு பொதுவுடமை - உள்ள
நோவுக்கு நல்ல மருந்து கிடைத்திட
யாருக்கும் யாவும் சமவுரிமை - இங்கும்
யாவர்க்கும் உண்டு பொதுவுடமை - உள்ள
நோவுக்கு நல்ல மருந்து கிடைத்திட
தேடிச் சரித்திரத் தேர்ச்சிகொள்ளு!!
-விவேக்பாரதி
11-12-21
Comments
Post a Comment