மிச்சாங்கில் மீட்ட கவிதை
வானத்தையே பூமிமேல அமுக்கப் பார்க்குது - காத்து
வாடான்னு ஏறிவந்து தள்ளப் பார்க்குது
வங்ககடலு சென்னைக்குள்ள நொழைய பார்க்குது - போற
வழியிலெல்லாம் சேத்துத்தண்ணி இழுக்கப் பார்க்குது
ஆனமட்டும் தண்ணிவந்து நெறைக்க பார்க்குது - மேகம்
ஆரவாரம் காட்டாம அடிச்சு ஊத்துது
அத்தனைக்கும் மத்தியில பாட்டு கேக்குது - ச்சே
யார்சமைக்கும் வாசனையோ கவித பூக்குது!
வாடான்னு ஏறிவந்து தள்ளப் பார்க்குது
வங்ககடலு சென்னைக்குள்ள நொழைய பார்க்குது - போற
வழியிலெல்லாம் சேத்துத்தண்ணி இழுக்கப் பார்க்குது
ஆனமட்டும் தண்ணிவந்து நெறைக்க பார்க்குது - மேகம்
ஆரவாரம் காட்டாம அடிச்சு ஊத்துது
அத்தனைக்கும் மத்தியில பாட்டு கேக்குது - ச்சே
யார்சமைக்கும் வாசனையோ கவித பூக்குது!
பொயலு தாயி பொயலு - இது
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!
ஊசிகுத்தும் சாரல்மழ கிழிக்கப் பார்க்குது - மக்க
உசுருக்குள்ளும் ஊடுருவி எடத்த கேட்குது
ஒன்னுமில்லா எடத்தில்கூட தண்ணி தேங்குது - முன்ன
ஊருமொத்தம் குடிச்சதப்போல் குடிக்கப் பார்க்குது
வீசுங்காத்து தெசயமாத்தி விசிறி அடிக்குது - என்ன
வேதனையோ மேகமெல்லாம் அழுது தீர்க்குது
வெரட்டிப்போகும் நேரத்திலும் பாட்டு கேக்குது - அந்த
வெஷமக்காரி கொரலுகேட்டு கவித பூக்குது!
உசுருக்குள்ளும் ஊடுருவி எடத்த கேட்குது
ஒன்னுமில்லா எடத்தில்கூட தண்ணி தேங்குது - முன்ன
ஊருமொத்தம் குடிச்சதப்போல் குடிக்கப் பார்க்குது
வீசுங்காத்து தெசயமாத்தி விசிறி அடிக்குது - என்ன
வேதனையோ மேகமெல்லாம் அழுது தீர்க்குது
வெரட்டிப்போகும் நேரத்திலும் பாட்டு கேக்குது - அந்த
வெஷமக்காரி கொரலுகேட்டு கவித பூக்குது!
பொயலு தாயி பொயலு - இது
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!
கார்கொழல சிலுப்புரியோ சூறக்காத்துல - நீ
கால்வலிக்க ஆடுறியோ மேகக்கூத்துல
கண்ணக்கண்ண உருட்டுரியோ இடியுந் தாக்கிட - என்ன
காரணமோ இந்தப்புயல் பகைய தீர்த்திட
ஊர்முழுக்க வெள்ளமடி மனசு தணியணும் - இந்த
உசுருவாழ கொஞ்சமாக தணிஞ்சு பொழியணும்
ஒனக்குப்பேரு மாரியம்மா நெனப்பில் இருக்கணும் - ரொம்ப
ஓங்கிடாம சாந்தமாக வெளுத்து வெலகணும்!
கால்வலிக்க ஆடுறியோ மேகக்கூத்துல
கண்ணக்கண்ண உருட்டுரியோ இடியுந் தாக்கிட - என்ன
காரணமோ இந்தப்புயல் பகைய தீர்த்திட
ஊர்முழுக்க வெள்ளமடி மனசு தணியணும் - இந்த
உசுருவாழ கொஞ்சமாக தணிஞ்சு பொழியணும்
ஒனக்குப்பேரு மாரியம்மா நெனப்பில் இருக்கணும் - ரொம்ப
ஓங்கிடாம சாந்தமாக வெளுத்து வெலகணும்!
பொயலு தாயி பொயலு - இது
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!!
பொறட்டிப் போடும் பொயலு - ஒன்
பயலுங் கொஞ்சம் பொழச்சுக்கிறேன்
பாத காட்டி நகளு!!
-விவேக்பாரதி
04.12.2023
காலை 09.32
04.12.2023
காலை 09.32
Comments
Post a Comment