என் தோரண வாயில்
அன்பு ரசிகாவுக்கு,
சொற்கள் என்னைக் கூட்டிப் போகும்
சுந்தரப் பாதையிலே - நான்
தொட்டதை எல்லாம் அனுபவ மாகச்
சொடுக்கிப் போடுகிறேன்!
கற்கள் சிதறி விழுவது போலவை
காலத்து வீதியிலே - சிறு
கவிதைக ளாகி பாடல்களாகி
கழன்று விழுகிறதே!
ஆளறியாத மாய வெளிக்குள்
அகழ்ந்து போகையிலே - மனம்
ஆனந்தம் எனும் முகில்மேல் ஏறி
அளந்து பார்க்கையிலே,
தோளறியாமல் சிறகு முளைக்க
தொடுவான் தொடுகின்றேன் - அதில்
தோன்றிய வண்ணம் குழைத்துக் கவிதை
தோறும் இழைக்கின்றேன்!
சுந்தரப் பாதையிலே - நான்
தொட்டதை எல்லாம் அனுபவ மாகச்
சொடுக்கிப் போடுகிறேன்!
கற்கள் சிதறி விழுவது போலவை
காலத்து வீதியிலே - சிறு
கவிதைக ளாகி பாடல்களாகி
கழன்று விழுகிறதே!
ஆளறியாத மாய வெளிக்குள்
அகழ்ந்து போகையிலே - மனம்
ஆனந்தம் எனும் முகில்மேல் ஏறி
அளந்து பார்க்கையிலே,
தோளறியாமல் சிறகு முளைக்க
தொடுவான் தொடுகின்றேன் - அதில்
தோன்றிய வண்ணம் குழைத்துக் கவிதை
தோறும் இழைக்கின்றேன்!
என்
தோரண வாயில் இதுதான், உன்னை
தொடக்க அழைக்கின்றேன்!!
தோரண வாயில் இதுதான், உன்னை
தொடக்க அழைக்கின்றேன்!!
–விவேக்பாரதி
15.02.2021
Comments
Post a Comment