குற்றால குதூகலம்
குற்றால அருவியில் முதன்முறை குளித்தபோது, அதைக் கண்டு வியந்து தண்ணீரின் சத்தத்துதோடே உரக்கச் சொன்ன கவிதை.
படிப்படியாய்த் தண்ணீர்;
பளிங்குபோலத் தண்ணீர்
பரம்பொருளே நீர்வடிவில்
பாய்ந்தணைத்த தண்ணீர்!
குடங்குடமாய்த் தண்ணீர்;
குன்று பாய்ச்சும் தண்ணீர்
கொட்டிக்கொட்டி உடல்முழுக்கக்
குளிர்கொடுக்கும் தண்ணீர்!
எடுக்கவெடுக்கத் தன்ணீர்;
இன்பமான தண்ணீர்;
எழுதிவைத்த ஓவியமாய்
ஏறிவிழும் தண்ணீர்;
விடியலெனப் பெருகி
விலங்குபோடும் அருவி,
விளையாடிப் பார்க்கையிலே
உள்ளமாகும் குருவி!!
பளிங்குபோலத் தண்ணீர்
பரம்பொருளே நீர்வடிவில்
பாய்ந்தணைத்த தண்ணீர்!
குடங்குடமாய்த் தண்ணீர்;
குன்று பாய்ச்சும் தண்ணீர்
கொட்டிக்கொட்டி உடல்முழுக்கக்
குளிர்கொடுக்கும் தண்ணீர்!
எடுக்கவெடுக்கத் தன்ணீர்;
இன்பமான தண்ணீர்;
எழுதிவைத்த ஓவியமாய்
ஏறிவிழும் தண்ணீர்;
விடியலெனப் பெருகி
விலங்குபோடும் அருவி,
விளையாடிப் பார்க்கையிலே
உள்ளமாகும் குருவி!!
–விவேக்பாரதி
18.11.2018
Comments
Post a Comment