சின்னஞ்சிறு கீற்றே!
சின்னஞ் சிறுகீற்றே - நீயோர்
சேதி கேளாயோ?
உன்னைத் தோற்கடிப்பாள் - அவள்
உருவம் காணாயோ?
மென்மை நடையழகி - எழில்
மேவும் இடையழகி
தன்னந் தனிமையிலே - எனைத்
தழுவிடுவாள் குலவி!
பச்சைப் பசுமுடல்தான் - கொண்ட
பருவம் இளையதுதான்
இச்சைக் கினியவள்தான் - காண
இன்பம் கொடுப்பவள்தான்!
உச்சந் தலைவகுட்டில் - இடை
உன்னதக் கோலத்திலும்
மெச்சற் குரியவளாம் - என
மேலவர் வாழ்த்திடுவார்!
காற்றில் அசைபவள் நீ - என்
கவியின் அசைபவள்காண்!
சேற்றில் வளர்பவள் நீ -அவள்
சேர்வதென் நெஞ்சகமாம்!
ஆற்றல் உடையவளாய்க் - கண்
அழகில் கிழிப்பவளாய்த்
தோற்றம் கொடுத்திடுவாள் - முனம்
தோற்பும் அழகல்லவோ??
-விவேக்பாரதி
07.07.2017
சேதி கேளாயோ?
உன்னைத் தோற்கடிப்பாள் - அவள்
உருவம் காணாயோ?
மென்மை நடையழகி - எழில்
மேவும் இடையழகி
தன்னந் தனிமையிலே - எனைத்
தழுவிடுவாள் குலவி!
பச்சைப் பசுமுடல்தான் - கொண்ட
பருவம் இளையதுதான்
இச்சைக் கினியவள்தான் - காண
இன்பம் கொடுப்பவள்தான்!
உச்சந் தலைவகுட்டில் - இடை
உன்னதக் கோலத்திலும்
மெச்சற் குரியவளாம் - என
மேலவர் வாழ்த்திடுவார்!
காற்றில் அசைபவள் நீ - என்
கவியின் அசைபவள்காண்!
சேற்றில் வளர்பவள் நீ -அவள்
சேர்வதென் நெஞ்சகமாம்!
ஆற்றல் உடையவளாய்க் - கண்
அழகில் கிழிப்பவளாய்த்
தோற்றம் கொடுத்திடுவாள் - முனம்
தோற்பும் அழகல்லவோ??
-விவேக்பாரதி
07.07.2017