வெண்ணிலாக் காதல்


வெண்ணிலாவே !
பெண்ணிலாவே !
என் நிலாவே !

உன்னைக் கண்ட நொடி முதலாய்
எந்தன் நெஞ்சம் என்வசம் இல்லை !

நீ குளிர்ந்த பார்வையினை வீசுகையில் - நான் 
குழந்தைப் போலவே சிரிப்பதும் ஏன் ?

நீ மேகம் எடுத்து உன்னை மூடிக் கொண்டு - சிறு 
ஊடல் விளையாட்டு செய்வதும் ஏன் ?

உன் முகத்தைப் பார்த்திட ஆசை தான்!
உன் குரலோ குயிலின் செந்தமிழ் ஓசை தான் !

வெண் திரை கழற்றி
உடல் சிலிர்க்க
உன் பார்வைக் கனையைப்
பாய்ச்சிவிட்டால் என்ன?

அமாவாசைக் காணும் தினம்
என் கண்கள்
தூக்கத்தை தொலைக்கின்றன!

பௌர்ணமி நிலவே
உனைக் காண்கையில்
என்னே உன் அழகென்று
மலைக்கின்றன !

நீ வந்தால்
இரவினில் புது ஒளி பாயுமே!

நாள் தோறும் தேய்கிறாய்
அதவும் நாணத்திலா ?

தேய்ந்தப் பின் வளர்கிறாய்
இதுவும் மோகத்திலா ?

என்மனம் சிறைப் பிடிக்கிறாய்
அதவும் காதலிலா !

விவேக்பாரதி
14.02.2014

Comments

Popular Posts