பெண் மயிலே


பெண் மயிலே என்னைத் தவிர்த்து
செல்வாயோ இதயம் உடைத்து
உண்மையிலே உனது நினைவால்
உறக்கங்கள் தொலைகிறேன்
கண்ணிமையின் நீரைத் துடைத்து
அழாமல் நடிக்கிறேன் !

அந்த நாளில் கனாக்களில்
உன்னிடம் நான்! என்னிடம் நீ!
இந்த நாள் அதை வினாவினால்
நாம் விடையா? விடுகதையா?

எந்தன் கண்களின் பிம்பமெல்லாம்
உன் முகமே! உன் முகமே !
அதை மறந்திடத் தேவையடி
என் கண்ணுக்கு ஒரு யுகமே !

கடைவிழியில் உன்னை அடித்தேன்
கண்ணீர் வழி நழுவி நீ
நகர்வதோ   

தனிச் சாலையில் உலாவினோம்
ஒருமுனை நான் ! மறுமுனை நீ !
அந்தத் தருணம் கனாவிலும்
இனிவருமா? இனித்திடுமா ?

மயிர் நுழைந்திடும் சிறு தொலைவு
நமக்குள்ளே அன்று இல்லையே
உயிர் உடைந்திட பெருந் தொலைவு
வந்ததிங்கு யார் பிழையா ?

பெண்மயிலே உன்னை அழைக்கக்
காகிதம் வழிக் கவிதைகள்
தூதுவிட்டேன் !

-விவேக்பாரதி
16.07.2014

Comments

Popular Posts