அப்பர்சாமி பஞ்சகம்
-மயிலாப்பூரில் கோயில் கொண்டுள்ள அப்பர்சாமி கோயிலுக்கு முதன்முறை சென்றபோது இசைக்கவி ரமணன் ஐயாவின் அன்புக் கட்டளையால் எழுதப்பட்ட பதிகம்-
மௌனத்தின் வெளியெண்ணி தியானிக்கத் தெரிகின்ற
முழுமூலம் நீ என்கிறார் - வாழ்வில்
மோகத்தை எண்ணத்தின் போகத்தை விட்டுவிட
முக்திதரு வாயென்கிறார்
கானத்தில் பிசகாது கவியாற்றல் குறையாது
கருத்தூற்றும் அடியவர்க்கு - நீ
கதிதந்து விதிதீர்த்துக் கருணால யங்காட்டிக்
கவினாக்குவாய் என்கிறார்
ஞானத்தை வரமாகக் கொண்டுள்ள பண்டிதரின்
ஞாலத்தை விரிவாக்கியே - அவர்
நாளைக்கு வருவதையும் வேடிக்கை போற்சொல்லும்
நயம்கூட்டுவாய் என்கிறார்
நானெத்தைச் செய்துன்றன் நனிபத்ம பாதத்தின்
நலம்காணக் கூடுமையா? - சிறு
நாணலை இமைதூக்கி நீகாணப் பாடுவேன்
நல்லப்ப சாமி ஐயா!
முழுமூலம் நீ என்கிறார் - வாழ்வில்
மோகத்தை எண்ணத்தின் போகத்தை விட்டுவிட
முக்திதரு வாயென்கிறார்
கானத்தில் பிசகாது கவியாற்றல் குறையாது
கருத்தூற்றும் அடியவர்க்கு - நீ
கதிதந்து விதிதீர்த்துக் கருணால யங்காட்டிக்
கவினாக்குவாய் என்கிறார்
ஞானத்தை வரமாகக் கொண்டுள்ள பண்டிதரின்
ஞாலத்தை விரிவாக்கியே - அவர்
நாளைக்கு வருவதையும் வேடிக்கை போற்சொல்லும்
நயம்கூட்டுவாய் என்கிறார்
நானெத்தைச் செய்துன்றன் நனிபத்ம பாதத்தின்
நலம்காணக் கூடுமையா? - சிறு
நாணலை இமைதூக்கி நீகாணப் பாடுவேன்
நல்லப்ப சாமி ஐயா!
யாதென்றன் புறவாழ்வு யாதென்றன் அகவாழ்வு
யாதொன்றும் அறிகிலேன் நான் - தனி
யாழ்போல இசைமீட்ட அலைபோலத் தாளமிட
யாக்கையைப் பெற்றிலேன் நான்
தீதென்ன நன்றென்ன ஆராயத் தெரியாமல்
தினமாடும் ஓருயிர் நான் - எது
திடமென்று தெரியாமல் திறனென்ன அறியாமல்
திக்குமுக்காடுவோன் நான்
கீதங்கள் பலபாடிக் கவிசொல்லி அடிநாடக்
கிட்டநின்(று) அடிமை செய்ய - என்
கீழுடல் அறுத்தேனுங் கண்ணைக் கொடுத்தேனும்
கிரிவல பல நடந்தும்
சூதைத் துறந்தேனும் மாதை மறந்தேனும்
சுத்தமுற வழியில்லையே - என்
சுமைநீங்க நின்னருட் சுடர்காணப் பாடுவேன்
தீண்டப்ப சாமி ஐயா!
யாதொன்றும் அறிகிலேன் நான் - தனி
யாழ்போல இசைமீட்ட அலைபோலத் தாளமிட
யாக்கையைப் பெற்றிலேன் நான்
தீதென்ன நன்றென்ன ஆராயத் தெரியாமல்
தினமாடும் ஓருயிர் நான் - எது
திடமென்று தெரியாமல் திறனென்ன அறியாமல்
திக்குமுக்காடுவோன் நான்
கீதங்கள் பலபாடிக் கவிசொல்லி அடிநாடக்
கிட்டநின்(று) அடிமை செய்ய - என்
கீழுடல் அறுத்தேனுங் கண்ணைக் கொடுத்தேனும்
கிரிவல பல நடந்தும்
சூதைத் துறந்தேனும் மாதை மறந்தேனும்
சுத்தமுற வழியில்லையே - என்
சுமைநீங்க நின்னருட் சுடர்காணப் பாடுவேன்
தீண்டப்ப சாமி ஐயா!
பல்லூர்கள் சென்றுன்றன் பலன்சொல்லும் மந்திரம்
பாடாத மூடனையா - என்
பணியென்ன கடனென்ன ஏதுமறி யாமலே
பயணிக்கும் தோனி ஐயா!
நல்லோர்கள் வழிநின்று நாள்மாற மனம்மாறி
நாசத்தில் இடறி வீழ்ந்து - ஒரு
நலனற்ற ஏழையாய் நடுத்தெருவில் ஊமையாய்
நாள்போக்கும் நெஞ்சனையா
வில்போல விசைகொண்ட இளமையின் ஆற்றலை
வீணாக்கும் கயவன் ஐயா - இரு
விழிமூடி தியானித்து வழிதேட யோசிக்கும்
வித்தை அறியாதவன் நான்
புல்போல சிலநேரம் புள்போட சிலநேரம்
புதிர்போடும் மனம் ஏனையா? - ஒரு
புருவத்தின் அசைவேனும் காட்டிடப் பாடுவேன்
புகழப்ப சாமி ஐயா!
பாடாத மூடனையா - என்
பணியென்ன கடனென்ன ஏதுமறி யாமலே
பயணிக்கும் தோனி ஐயா!
நல்லோர்கள் வழிநின்று நாள்மாற மனம்மாறி
நாசத்தில் இடறி வீழ்ந்து - ஒரு
நலனற்ற ஏழையாய் நடுத்தெருவில் ஊமையாய்
நாள்போக்கும் நெஞ்சனையா
வில்போல விசைகொண்ட இளமையின் ஆற்றலை
வீணாக்கும் கயவன் ஐயா - இரு
விழிமூடி தியானித்து வழிதேட யோசிக்கும்
வித்தை அறியாதவன் நான்
புல்போல சிலநேரம் புள்போட சிலநேரம்
புதிர்போடும் மனம் ஏனையா? - ஒரு
புருவத்தின் அசைவேனும் காட்டிடப் பாடுவேன்
புகழப்ப சாமி ஐயா!
எதைவேண்ட எவண்வேண்ட ஏன்வேண்ட என்றெலாம்
என்றும் நினைத்ததில்லை - உன்
எழிலாடும் கோலத்தைக் கண்டதும் என்கைகள்
எழுதா(து) இருந்ததில்லை!
புதுமைக்கும் பழமைக்கும் நிலைமாறும் எண்ணத்தில்
புரியுமோர் செய்தியில்லை - வெற்றுப்
புகழ்தேடும் ஆசையை இகழ்நேர அழுகையைப்
புதைக்கவும் தெரியவில்லை
மதுதொட்டுப் புகைதொட்டு பொறியின்ப வெறிதொட்டு
மறுநாளில் உனைப் பாடியே - உன்
மனம்வென்ற மக்களின் வரலா(று) அறிந்துமே
மரியாதை தெரியவில்லை!
கதவுற்ற வீட்டுக்குள் நாளெலாம் கதறியே
காலங் கழித்த பிள்ளை - ஒரு
கணக்குமிடத் தெரியாமல் காலத்தின் ஓட்டத்தில்
காலிடறி ஓடும் பிள்ளை
சதியென்ன செய்தாலும் சினமென்னைத் தின்றாலும்
சிரிக்கின்ற ஜீவன் ஐயா! - உள்ளில்
சக்தியைக் கொண்டவா நான்பாடி கேட்பதனைத்
தா! அப்பசாமி ஐயா!
என்றும் நினைத்ததில்லை - உன்
எழிலாடும் கோலத்தைக் கண்டதும் என்கைகள்
எழுதா(து) இருந்ததில்லை!
புதுமைக்கும் பழமைக்கும் நிலைமாறும் எண்ணத்தில்
புரியுமோர் செய்தியில்லை - வெற்றுப்
புகழ்தேடும் ஆசையை இகழ்நேர அழுகையைப்
புதைக்கவும் தெரியவில்லை
மதுதொட்டுப் புகைதொட்டு பொறியின்ப வெறிதொட்டு
மறுநாளில் உனைப் பாடியே - உன்
மனம்வென்ற மக்களின் வரலா(று) அறிந்துமே
மரியாதை தெரியவில்லை!
கதவுற்ற வீட்டுக்குள் நாளெலாம் கதறியே
காலங் கழித்த பிள்ளை - ஒரு
கணக்குமிடத் தெரியாமல் காலத்தின் ஓட்டத்தில்
காலிடறி ஓடும் பிள்ளை
சதியென்ன செய்தாலும் சினமென்னைத் தின்றாலும்
சிரிக்கின்ற ஜீவன் ஐயா! - உள்ளில்
சக்தியைக் கொண்டவா நான்பாடி கேட்பதனைத்
தா! அப்பசாமி ஐயா!
உள்ளத்தில் விடுதலை உணர்வுக்குள் சமநிலை
உருவாகக் காண வேண்டும் - என்
ஊமைவாய் உமையருளும் பாடலின் ஊற்றினால்
உயிரோடு பாட வேண்டும்
தெள்ளத் தெளிந்ததாய்த் தெளிவூட்டும் மின்னல்கள்
தேடிவந்(து) அடிக்க வேண்டும் - என்
தேவைகள் யாவுமொரு பூவாகிப் போயுன்றன்
திருப்பாதம் சேர வேண்டும்!
கள்ளமில்லாக் குணம் கவலையில்லா மனம்
காயத்தில் பொறிகள் ஆட்சி - வரும்
கருத்துற்ற வேகத்தில் கையெழுதும் பேராற்றல்
கடவுள் மறவாத நெஞ்சம்
விள்ளற்கு விட்டபல விழைவெலாம் விளைவெலாம்
விரிவாய்க் கொடுத்தி(டு) ஐயா - கரு
விடமுண்ட கண்டனே விடையேறும் மன்னனே
வீரப்ப சாமி ஐயா!!
உருவாகக் காண வேண்டும் - என்
ஊமைவாய் உமையருளும் பாடலின் ஊற்றினால்
உயிரோடு பாட வேண்டும்
தெள்ளத் தெளிந்ததாய்த் தெளிவூட்டும் மின்னல்கள்
தேடிவந்(து) அடிக்க வேண்டும் - என்
தேவைகள் யாவுமொரு பூவாகிப் போயுன்றன்
திருப்பாதம் சேர வேண்டும்!
கள்ளமில்லாக் குணம் கவலையில்லா மனம்
காயத்தில் பொறிகள் ஆட்சி - வரும்
கருத்துற்ற வேகத்தில் கையெழுதும் பேராற்றல்
கடவுள் மறவாத நெஞ்சம்
விள்ளற்கு விட்டபல விழைவெலாம் விளைவெலாம்
விரிவாய்க் கொடுத்தி(டு) ஐயா - கரு
விடமுண்ட கண்டனே விடையேறும் மன்னனே
வீரப்ப சாமி ஐயா!!
-விவேக்பாரதி
16.06.2017
Comments
Post a Comment